Showing posts with label sri manavala mamunigal. Show all posts
Showing posts with label sri manavala mamunigal. Show all posts

Sunday, August 3, 2014

ரஹஸ்யத்ரயம்

 ஸ்ரீ:
ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே இராமனுசாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீமத்  வரத குரவே நம:


திருமாமகள் கேள்வனானய், ஸ்ரீ வைகுண்டாதிபதியான ஸர்வேஸ்வரன், ஸ்ரீ வைகுண்டத்திலே, நித்ய முக்தர்களுக்கு [நித்யர் - ஸம்ஸாரமாகிற  லீலா விபூதியிலே ஒரு நாளும் பிறவாதவர்கள், முக்தர் - ஸம்ஸாரத்தில் இருந்து அவனது திருவருளாலே விடுபட்டு மோக்ஷத்தை அடைந்தவர்கள்] பரமானந்ததை விளைவித்துக் கொண்டு, ஸேவை ஸாதிக்கிறான். இப்படி இருக்கச் செய்தே, அந்த நித்ய முக்தர்களைப் போலே, இந்நிலவுலகத்தில் வாழும் நமக்கும் அவ்வெம்பெருமானை அநுபவிக்க ப்ராப்தி (உரிமை) இருக்கச் செய்தேயும், நாம் அதை இழந்து கிடக்கும் தன்மையை நோக்கி, மிகவும் வருத்தப்பட்டு, "சாலப் பல நாள் உகந்து உயிர் காப்பான்" என்கிறபடியே சேதனர்களான ஜீவாத்மாக்களுக்கு ப்ரளய ஆபத்து வந்த போது  காப்பாற்றி, அவர்களுக்கு சரீரத்தையும், இந்த்ரியத்தையும் கொடுத்தருளினான். மேலும், சேதனர்கள் தவறான வழியில் செல்லாதபடி, நித்யமாய், ஒரு புருஷனாலே சொல்லப்படாததாய், ஸ்வத ப்ரமாணமாய் விளங்குகின்ற வேதத்தைக் கொடுத்தருளினான். வேதம் மட்டுமின்றி, அதை ப்ரகாஸப்படுத்துகிற, அதன் அர்த்ததை விளக்குகிற இதிஹாஸம், புராணம் மற்றும் ஸ்ம்ருதிகளையும் கொடுத்தருளினான். இதனையே "முனிவரை யிடுக்கியும் முந்நீர் வண்ணாயும் வெளியிட்ட சாஸ்த்ர தாத்பர்யங்கள்" என்கிறார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். வேதத்தை தான் நேரே ப்ரம்மாவுக்கு கொடுத்தருளினது மட்டும் இன்றிக்கே, ரிஷிகளான முனிவர்கள் மூலமாக வேதத்தின் உபப்ரம்மணங்களான மற்றைய சாஸ்த்ரங்களை வெளியிட்டருளினான் *கலைகளும் வேதமும் நீதி நூலும் .... நீர்மையினால் அருள் செய்து * என்கிறபடியே.



இங்கு ஒரு ஸந்தேஹம் தோன்றும். புருஷோத்தமனான எம்பெருமான், நம்மை கண்டு ஏன் இறக்கம் கொள்ள வேண்டும்? இதற்கு *உன் தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது* எனப் பாடவல்ல நாச்சியார் அருளியபடி, எம்பெருமானுக்கு ஜீவர்கள் மேல் இருக்கும் ஸ்வாமித்வமே {ஸ்ரீமந் நாராயணன் - ஸ்வாமி; ஜீவர்கள் - அவனுடைய சொத்து;ஸ்ரீமந் நாராயணன்  -சேஷி, கைங்கர்யம் ஏற்றுக் கொள்ளுபவன்,  ஜீவர்கள் - சேஷபூதர்கள், அவனுக்கு கைங்கர்யம் பண்ணுகிறவர்கள்}, இப்படி க்ருபையை பிறப்பிக்கச் செய்யும்.


ஆனாலும், அவ்வேதத்தை அதிகரித்து, அதன் வழி நடந்து, அதன் அர்த்த விஷேசங்களைப் புரிந்து கொண்டு எம்பெருமானை அடைவது மிகவும் கடினமாகையாலே, அதன் ஸாரமாகிற ரஹஸ்யத்ரயதையும் ப்ரபலப்படுத்தியருளினான்.

இந்த ரஹஸ்யத்ரயம் என்றால் என்ன? - கீழில் காட்டப்படுகின்ற மூன்றேயாகும்.


  1. திருமந்த்ரம்
  2. த்வயம்
  3. சரம ஸ்லோகம்


இம்மூன்று ரஹஸ்யங்களை யார் யாருக்குச் சொன்னது என்பது நமக்குத் தெரிந்தால், இதனுடைய ஏற்றம்/பெருமை புரியும். திருமந்த்ரத்தை, ஸ்ரீ பதரிகாச்ரமத்திலே, ஸ்ரீமந் நாராயணனா எம்பெருமான் நர-நாரணர்களாய், ஆசார்ய சிஷ்ய வடிவையெடுத்து, ப்ரகாசப்படுத்தினான். த்வயத்தை ஸ்ரீவிஷ்ணு லோகத்திலே, பிராட்டிக்கு உபதேஸித்தருளினான். சரம ஸ்லோகத்தை அர்ஜுனனுக்கு, திருத்தேர் தட்டிலே உபதேஸித்தருளினான்.



ஸகல வேதத்தின் ஸாரமாகிற இந்த ரஹஸ்யத்ரயத்தையும், ஸமாச்ரயண காலத்தில்  ஆசார்யன் உபதேசித்தருளுகிறார்.  இவ்வர்த்தங்கள் இப்படி நமக்கு கிடைக்கக் காரணமானவர் ஸ்வாமி இராமானுசரே ஆகும்! பரமார்த்தமான இந்த ரஹஸ்யங்களை எம்பெருமானார்க்கு முன்புள்ள ஆசார்யர்கள் ஒராண் வழியாய், அதாவது ஒரு ஆசார்யர் ஒரு சிஷ்யனுக்கு உபதேசிக்க, அதுவும் மிகவும் பரீக்ஷை பண்ணி பின்பே உபதேசித்து வந்தார்கள். எம்பெருமானாரையே 18 தடவை வரச்செய்து, பின்பன்றோ திருக்கோஷ்டியூர் நம்பி உப்தேசித்தருளினார்! ஆனால் எம்பெருமானாரோ ஆசையிருந்தாலே போதும் என அதை மாற்றியருளினார். அதனால் வரம்பறுத்த பெருமானார் என்றே போற்றப்படுகிறார். இதை ஸ்வாமி பிள்ளை லோகாசார்யரே விவரித்தருளுகிறார். இந்த அர்த்தத்தின் மேன்மையைப் பார்த்ததாலே, எம்பெருமானார்க்கு முன்புள்ள ஆசார்யர்கள் வரம்பு வைத்து உபதேஸித்துவந்தார்கள். ஆனால் எம்பெருமானாரோ, ஸம்ஸாரிகளின் துர்க்கதியைப் பார்த்து அந்த வரம்பை அறுத்தருளினார்.

இங்ஙனம் ஸ்வாமி மணவாள மாமுனிகளின் முமுக்ஷுப்படியின் அவதாரிகையைத் தழுவி யதாமதி விண்ணபிக்கப்பட்டது.இந்த ரஹஸ்யத்ரயத்திலுள்ள அர்த்த விஷேசங்களை எல்லாம் அடக்கி, ஸூத்ரங்களாக ஆக்கித் தந்தருளினார், லோகதேசிகனான பிள்ளை லோகாசாரியார். அதற்கு மிகவும் அழகாக, பதம் பதமாகயெடுத்து வ்யாக்யானம் அருளியுள்ளார் விசதவாக் சிகாமணியான மணவாள மாமுனிகள். இந்த க்ரந்தத்தை அவசியம் அனைவரும், ஆசார்யன் திருவடிகளில் காலக்ஷேபமாகக் கேட்டு உய்வு பெறுவோமாக.

Friday, December 21, 2012

Srimadh Thirumalai AnanthAn Pillai Mandayam AnanthAzhwar Swami Vaibhavam


Sri:
Srimathae Ramanujaya namaha
Srimath VaraVaramunayae namaha

English Translation of 

Srimadh ThirumalaiAnanthAnPillai Mandayam 

AnanthAzhwar Swami Vaibhavam

Authored by 

Ubhaya Vedantha Maha Vidwan Kanchi Sri Prathivaathi Bayankaram 


ANNANGARACHARYA SWAMI




This Swamy descended to earth on 1822 A.D, swabAnu samvathsaram in the month of Panguni on star AshleshA in mAndayam. Then Swamy moved to thirunArayanaurAm as swEkAram. Legend goes that swamy is amsA of AdhisEshA and owing to that only swamy has been named so. It is also said that swamy increased his pAndithyam using 'jyothismatheelathai thailam'. Swamy learnt all the sAstras from mysore Sri KoolipAlAchAr. Swami learnt Sri BhAshya and Bhagavath Vishaya from his father Sri. Maha BhAsya SingarAcharyar. Swami went to a Jaina Mutt near ‘sranau pau kau’ , a place in Mysore Jilla to teach sAstras to the mAdathipathi. Brama sOri Pandithar, mAdathipathi of this mutt learnt all the sAstras from this mahAn for three years. During that time, Swami developed in depth knowledge in the Lowgatha, Argatha granthAs.

Swami’s pandithyam started growing. Mysore ParakAla mata swami Srimadh Sri SrinivAsa Brahma tAntra Swami, while visiting ThirunArayanaPuram was surprised by Swami’s pAndithyam and recognized Swami as Asthana Vidwan of Sri Mutt. Swamy was barely 27 years old during that time! During such early age itself, Swami excelled in chadhussAstram, vAkyArtham and authored lots of granthAms. Swami will go along with Sri parakAla swamy during yAthrAs and will win over many vidwAns and corrected them. Seeing this, swami has been prized by mysore mahArAja too.

Swami has authored many vedAnta vAdha granthAs, alankAra granthAs & granthAs in tharkA sAstra. pandhithAs who go through sri bhAshya without studying 'vedAnta vAdavali' authored by this swami will not be considered as vedAnthis! Such is the greatness of this granthA!

Swamy lived in this vibuthi for only 40 years. Swamy started writing kandanam for the best advaita granthA "advaitha siddhi" in the name of nyaya bAskaram. when swamy completed the first parisedham, advaithis cognizant of this started calling swami for vAdha. During that time, some sri vaishnavas of parakAla mutt thought this as the right time to convert Swami to their sampradAyam. they started telling dhooshanas towards Sri Vara Vara muni to Swami. Swami was very much disturbed because of this. that night in his dream Adhi seshA came as first sri rAmanuja and then sri manavAla mAmuni

swami was clarified because of this dream and wrote the following in the very next day in his nyaya bAskaram

seshA: srimAn nikama makudEyukmA rakshAp ravrutha:
srimath rAmAvaraja munithAm soumya jAmAthru thAnja:
vinthan drupyath vimathapadalI pAdanOth dAma sookthi:
bUyAth bavya prathina mahimA sreyasE bUyasena:

apart from this, Swami's vaibhavam has been recorded by KalkiSimham NarasimAchAriyar in his vaibhava prakAshika. This sangrahA is also taken from the granthA. 


Thursday, December 20, 2012

மார்கழியில் அவிட்டத்தில் வந்த வள்ளல் வாழியே

மார்கழியில் அவிட்டத்தில் வந்த வள்ளல் வாழியே 

வள்ளல் 

"மார்கழியில் அவிட்டத்தில் வந்த வள்ளல் வாழியே" - இது ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் வாழித் திருநாமத்தில் பொறித்து வைக்கப் பட்டுள்ள வாசகம் ஆகும். வள்ளல் என்னும் வார்த்தையை பெரிய ஜீயர் தமது உபதேச ரத்தினமாலையில் இவரது திருத்தகப்பனாரை குறித்து பிரயோகப்படுத்தியுள்ளார்.(திருத்தகப்பனாரிடம் உள்ள குணமானது ஸ்வாமியிடமும் உள்ளது என நிர்வாகிக்கவும் குறையில்லை. அம்பரமே, தண்ணீரே, சோறே என்ற பாட்டுக்கு கிருஷ்ணனிடம் இத்தகைய குணங்கள் இருப்பதினாலே வசுதேவரிடம் இது உள்ளதாக வ்யாக்யாநிக்கப்பட்டுள்ளது)  அதற்க்கு வ்யாக்யானமிட்டருளிய பிள்ளைலோகம் ஜீயர் வள்ளல் என்பதற்கு -  ஔதார்யமுடைய என குறித்துள்ளார். ஔதார்யம் என்னும் குணமானது   தம்மிடம் இருக்கும் செல்வத்தை ஒன்றும் ஒளிக்காமல் கருணையுடன் அனைவருக்கும் (பின்புள்ளாரும் அறியும்படி) கொடுப்பது என்பது உலக வழக்கு. இதன் மூலம் இத்தகைய குணமுடையவர்க்கு - செல்வம் மிகுந்திருக்கும் என்பதுவும் , அதை அவர்கள் அனைவருக்கும் கருணையுடன் விநியோகிப்பார்கள் என்பதுவும் தேறி நிற்கும். இப்பொழுது நாம் இந்த வள்ளல் சப்தமானது  ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரிடம் குடி கொண்டிருப்பதை சிறிது அனுபவிக்கலாம்.


அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் 
நமது ஆசார்யர்கள் செல்வமாகக் கருதுவது ஞானமும் கைங்கர்யமுமே ஆகும். அதிலும் நமது ஆச்சார்யர்களின் ஞானத்தை பற்றி பேச நமக்கு அருகதை தான் உண்டோ? நமது ஆசார்யஸார்வபௌமர்கள் ஞானத்திலே பரத்வத்தையும்; கருணையினால் அத்தகைய ஞானத்தை பின்புள்ளாரும் அறியும்படி ஏடுபடுத்துவதில் சௌசீல்யத்தையும் காட்டி நிற்பர்கள்.

பரத்வம்

பரத்வம் என்றால் மேன்மை என்று பொருள். மேன்மையான ஞானமானது அருளிச்செயல் ஞானமே ஆகும்.  இது எப்படி பொருந்தும் என்னில் - ஆச்சார்ய ஹ்ருதயம் 16வது சூர்ணிகையில் விஷ்ணு காயத்ரியின் மேன்மையை விளக்கும் பொருட்டு ஸ்வாமி கைக்கொண்டுள்ள ஸ்லோகமும் , அதற்க்கு ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளிய வியாக்யானமும் சேவிக்கும் கால் நன்கு விளங்கும். இந்த பிரமாணத்தின் மூலம் அனைத்திலும் விஷ்ணு காயத்ரி மேம்பட்டது என்று தேறி நிற்கும். அதிலும் முமுக்ஷுப்படி கொண்டு நோக்குங்கால் விஷ்ணு காயத்ரியில் பிரதம பதமான திருமந்த்ரம் (நாராயணா) மற்ற இரண்டிலும் (வாஸுதேவன், விஷ்ணு)  மேம்பட்டது என்று தேறி நிற்கும். த்வயம் திருமந்த்ரத்திர்க்கு விவரணமாகவும்; சரம ஸ்லோகம் த்வயத்திற்கு விவரணமாகவும் இருக்கிறது என்பது பூர்வர்கள் நிர்வாகம். இதன் மூலம் இம்மூன்றும் மற்றவற்றில் காட்டில் மிகவும் மேம்பட்டது என்பது.

தொட்ட தொட்ட இடம் தோறும் இந்த ரஹஸ்யத்த்ரயம் பொதிந்துள்ள அருளிச் செயலின் மேன்மையை பற்றி சொல்லவும் வேண்டுமோ? அத்தகைய அருளிச் செயல் என்னும் திராவிட வேதத்தை தன் நாவினால் கடைந்தவர் இவ்வாசிரியர் என்பது மிகையன்று. இது இவரது ஆசார்ய ஹ்ருதயம் என்னும் அற்புத கிரந்தம் கொண்டு தெளியலாம்.

ஆசார்ய ஹ்ருதயம்/மாறன் மனம் என்பது நம்மாழ்வாரின் பெருமைகளையும் அவரது திருவாய்மொழியின் ஆழ் பொருள்களையும்; அதற்க்கு ஈட்டில் உள்ள விளக்கங்களையும் உள்ளடக்கியது. இந்த கிரந்தம் அமைந்த நடையானது அதி அற்புதமானது. முழுவதும் அருளிச் செயல் சந்தைகளைக் கொண்டே சூர்ணிகைகள் அமைக்கப்பட்டுள்ளன (மற்ற பிரமாணங்கள் இருந்த போதிலும் அருளிச் செயல் சந்தைகளே அதிகம்). வெறும் சந்திகளுக்கு (வார்த்தை சேர்க்கை) மட்டுமே தமது சொந்த சொற்களை ஸ்வாமி உபயோகப்படுத்தியுள்ளார். இவ்வொப்பற்ற நூலுக்கு அவதாரிகை அருளிய விசதவாக்சிகாமணியாகிய  ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவாக்கினால் இதனை சிறிது அனுபவிப்போம்

"..... மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள்  பேசின திவ்யசூக்திகளாகையாலே ஆப்ததமமுமாய் அத்யந்தபோக்யமுமாய் இருக்கிற இதுவே தமக்கு அநவரதாபிமதமாகையாலும், முகமறிந்தவன் கோத்த முத்து  பெருவிலையனாமாப்போலே சந்தைகளைத் தாம் சேர்த்த சாதுர்யத்தாலே அருளிச் செயலில் ரஸஞயற்கு இதில் அர்த்தத்திலு காட்டில் சப்தந்தானே மிகவும் இனிதாயிருக்கும் ....."

இப்படி இருக்கும் அழகை சிறிது அனுபவிப்போம்.

சூர்ணிகை#127. இதில் நம்மாழ்வர்க்கும் பரதாழ்வானுக்கும் ஸாம்யம் காட்டும் படியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். மூலம் என்ன இருக்கிறது என்றால் -

"....அன்னையென் செய்யிலென் ராஜ்யமும் யானே என்று பெருஞ் செல்வமும் இச்சியாமல் வேண்டிச் சென்று திருவடியே சுமந்து விரைந்து வருமளவும் கண்ணநீர் பங்கமாக நிலம் துழாவிக் குடிக் கிடந்த கையறவும், .... "

இந்த சூர்ணிகையில் ஸ்வாமி தெரிவிக்க விழையும் விஷயம் என்  என்னில் - எப்படி ஸ்ரீ பரதாழ்வான், கைகேயியை சீறி (ராஜ்ஜியம் ஆளச் சொன்னதினால்), ராஜ்யமும் தாமும் பெருமாளுக்கு சேஷம் என்று சொல்லி, அவரிடம் சென்று வேண்டி, பெருமாள் இசையாமல் திருவடி நிலையை கொடுத்தருள, அதை சிரஸாவஹித்து, பெருமாள் திரும்பி வருமளவும் கண்ணீரினால் உண்டான சேற்றிலே நனைந்து,இஷ்வாகு வம்ச மரியாதை மாறாமல் (மூத்தவனே அரசாள வேண்டும்) இருந்தாரோ அதே போன்று ஆழ்வாரும் இருந்தார் - என்பதே. இதை மேற்காட்டிய மூல சூர்ணிகை கொண்டு தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏன் என்னில் -

அன்னையென் செய்யிலென் - திருவாய்மொழி 5ம் பத்து ஆழ்வார் அன்னையரை நோக்கிக் கூறுவது
ராஜ்யம்  - ராஜ்யஞ சாஹஞ்ச ராமஸ்ய - ஸ்ரீ ராமாயணம் -  
யானே - "யானே நீ என்னுடைமையும் நீயே" - ஆழ்வார் பெருமாளுக்கு சேஷி என்று தெரிவித்தது
பெருஞ் செல்வம் - "கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ் செல்வம்" - ஆழ்வார் செல்வத்தை வெறுத்தது
வேண்டிச் சென்று - "வேங்கட வாணனை வேண்டிச் சென்று" - ஆழ்வார் திருபுளியாழ்வார் அடியிலே இருந்த போதிலும் திருவேங்கடம் சென்று சேவிக்கப் பாரித்தது
திருவடியே சுமந்து - "திருவடியே சுமந்துழலக் கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை" - ஆழ்வார் அவன் அருளிய திருவடிகளை சிரஸாவஹித்து - பெருமாள் மோக்ஷம் தரும் வரையிலும்
கண்ணநீர்  துழாவிக்  - "கண்ணநீர் கைகளாலிறைக்கும்" "இருநிலம் கைதுழாவிருக்கும்" - ஆழ்வார் பட்ட பாடு
குடிக் கிடந்த -  "குடிக் கிடந்தாக்கம் செய்து" - ஆழ்வார் இந்நிலவுலக்கத்தில் இருக்கும் வரையிலும் ப்ரபன்ன மரியாதை (ஈஸ்வரன் வந்து கைக்கொள்ளும் வரை பொறுமையுடன் இருப்பது) தப்பாமல் இருந்ததையும்

மேற்கூறிய விளக்கத்தினால் ஸ்வாமி தாம் சொல்ல விழைந்ததை அருளிச் செயல் சந்தைகளைக் கொண்டே எப்படி அற்புதமாக விளக்கினார் என்பது தேறியிருக்கும்.(இன்னும் இது காஞ்சி ஸ்வாமி மொழி கொண்டு அனுபவித்தால் பேரின்பம் பயக்கும்). இன்னமும் ஒரு அற்புதமான நடை ஒன்று வெளிப்படும் - சாதாரணமாக மேற்கோள் காட்டும் நடைமுறை எப்படி என்னில்; ஒரு விஷயத்தை சொற்றொடரினால் வெளியிட்டு அதற்க்கு ஆதாரம் இதோ என பின்னால் வெளியுடுவதே ஆகும். உதாரணத்திற்கு "ஸத்யம்  ஸத்யம் புன:  இத்யாதிப்படியே எம்பெருமானாரே ஜெகதாசார்யர் ஆகிறார்" என்னும் வாசகத்தில் எம்பெருமானாரே ஜெகதாசார்யர் என்பது வாக்கியம்; அதற்க்கு பிரமாணம்/மேற்கோள்  ஸத்யம்  ஸத்யம் என்பதாகும்.

ஆனால் ஸ்வாமியின் நடையை ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகைகளில்  உற்று நோக்கினால், ஆழ்வார் அங்ஙனம் இருந்ததற்கு பிரமாண வசனமான மேற்கோள்களைக் கொண்டே வாக்கியம் அமைத்த சாமர்த்தியம் நம்மால் பேசத் தான் முடியுமா?  (இப்போது மாமுனிகளின் திருவாக்கினை மீண்டும் ஒருமுறை சேவித்தால்; ஸ்வாமி இத்தகைய சாமர்த்தியத்தை, தமது விசதவாக்சிகாமணி என்னும் விருதுக்கேற்ப கொண்டாடுவது விளங்கும்)  அதிலும் ஒரே வாக்யம் ஆழ்வார் படியையும் பரதாழ்வான் நிலையையும் தெரிவிப்பது அதி ஆச்சரியமல்லவா? இத்தகைய அதிமானுஷ க்ருத்யங்கள் இக்க்ரந்தம் தோறும் இருப்பதை கண்டே பெரியோர்கள் இதற்க்கு நிகரான க்ரந்தம் ஸ்ரீவைஷ்ணவ உலகத்தில் "ந பூதோ ந பவிஷ்யதி" என்று கொண்டாடுவர்கள்.

சௌசீல்யம் 


சௌசீல்யமாவது மேன்மையானவன் கீழ் நிற்பவர்களோடு கலந்து பரிமாறுவது - இது ஞானத்தில் எடுத்துக் கொண்டால் பெரியவர்களான ஆசார்யர்கள் நமது மந்த மதிக்கும் அர்த்தமாகும்படி ஏடுபடுத்தி போகும் கல்யாண குணம் என்னலாம். ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், திருப்பாவை, கண்ணிநுண்சிறுதாம்பு, அமலனாதிபிரான் ஆகிய அருளிச் செயல்களுக்கு வ்யாக்யானம் அருளியுள்ளார். ஸ்வாமி மட்டும் 4000 திவ்ய பிரபந்தங்களுக்கும் வ்யாக்யானம் அருளியிருந்தால் இந்த உலகத்தில் குரு-சிஷ்ய உறவே கெட்டுப்போய் இருக்கும் என்று சம்ப்ரதாயம் வல்ல பெரியோர்கள் பணிப்பர் (ஸ்வாமி அவ்வளவு விரிவாக ஐயம் திரிபு இன்றி வ்யாக்யானிப்பார் என்பது பொருள்). இது அதிசயோக்தி அன்று என்பதை கீழ் அனுபவித்து மகிழலாம்.

திருப்பாவைக்கு பெரிய ஆச்சான் பிள்ளை 3000 படியும், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் 6000 படியும், திருநாராயணபுரத்து ஆய் 2000 படி மற்றும் 4000 படி வ்யாக்யானங்கள் அருளியுள்ளனர். இவற்றுள் எண்ணிகையில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிய 6000 படியே அதிகமானது என்பது கையிலங்கு நெல்லிக்கனி. இதிலிருந்தே இது எவ்வளவு விரிவானது என்பதை உணரலாம். இன்றைக்கும் மஹான்கள் திருப்பாவை ப்ரவசனம் செய்வது இதன் துணை கொண்டே என்பது பெரியோர்களின் வாக்கு. உதாரணத்திற்கு ஒரு இடம் பார்க்கலாம் 

முதல் பாட்டு - சீர்மல்கும் ஆய்ப்பாடி - 3000 படி 
இவ்வூரில் ஐஸ்வர்யம் வழிந்து போய் வேறோர் ஊருக்கு வெள்ளமிடப்போந்திருக்கை. அதாவது - கிருஷ்ணனுடைய இங்குத்தை நீர்மை  பரமபதத்திலும் சென்று அலை எறியும்படியாய் இருக்கை. வஸ்துவுக்கு குணத்தாலேயிறே உத்கர்ஷம். அங்கு தன்னிற் குறைந்தாரில்லாமையினாலே குணத்துக்கு விஷயமில்லை.; ஆகையாலே, தர்மியை பற்றிக்கிடக்கும் அத்தனை அங்கு; அந்தகாரத்திலே தீபம் போலே பிரகாசிப்பதும் இங்கேயாகையாலே, ஐஸ்வர்யம் பூரணமாய்த்து இங்கேயிறே. த்ரிபாத் விபூதியில் அடங்காத வஸ்து, தன்னை ந்யாம்யமாக்கி வர்த்திக்கிற ஊரிறே. பண்டே கோஸம்ருத்தியுண்டாய் இருக்கச் செய்தே, பிள்ளைகள் கால்நலத்தாலே கறப்பன கடைவனவற்றால் குறைவற்றிருக்கை; நாழிப்பால் நாழிநெய் போருகை என்றுமாம். 

முதல் பாட்டு - சீர்மல்கும் ஆய்ப்பாடி - 6000 படி 
பண்டே  பலகாலும் வெண்ணையாலும் ஸம்ருத்தமாய் இருக்கச் செய்தே, உபய விபூதியுக்தன் பிறந்த ஐஸ்வர்யமுமுண்டிறே பஞ்சலக்ஷம் குடியையுடைத்தாய், அவர்களுக்கு தனமான பசு முதலான சம்பத்தாலே ஸம்ருத்தமாய், அதுதான் பிள்ளைகள் கால்நலத்தாலே ஒன்று இரட்டியாய் "ப்ரீதிரோதமஸஹிஷ்ட ஸா புரீ" என்னும்படியிறே சம்பத்து மிகுந்திருக்கும்படி (சீர்மல்கும் ஆய்ப்பாடி) இங்குத்தை ஐஸ்வர்யத்தினுடைய வாய்கால் காணும் நித்யவிபூதியில் ஐஸ்வர்யம்; குணாதிக்யத்தாலிறே வஸ்துவுக்கு ஏற்றம்; அது உள்ளது இங்கேயிறே. தர்மி அதுவாகையாலே மேன்மையும் இங்கே உண்டு. நீர்மை தன்னேற்றமாம். அங்கு தான் கும்பீடு கொண்டிருக்கும்; இங்கு தான் கும்பிடும் இடமிறே. "தொழுகையும் இவை கண்ட அசோதை" என்னகடவதிறே. இது காண்கைகாகவிறே வைதிக புத்ரர்கள்  வ்யாஜ்யத்தால் நாய்ச்சிமார் அழைத்துக் கண்டது. இவ்விடத்திலே ஐஸ்வர்யம் அதிலும் விஞ்சியிருக்கும் என்னுமிடம் - கண்ணாலே காணலாகிறதே. மனுஷ்யத்வே பரத்வமிறே இங்கு.

இதன் மூலம் ஸ்வாமி அருளிய வ்யாக்யானம் விரிவாகவும், அனைத்தையும் உள்ளடக்கியதாய் இருப்பதைக் காணலாம். இது ஒரு சிறு திவலையே. ஸ்வாமியின் வ்யாக்யானத்தில் ஆழ்ந்து அனுபவித்தால் இது போன்று எங்கும் பரந்து இருப்பதைக் காணலாம்.


ஆர்யஸ் சௌம்யவரஸ் சடாரிகலிஜித்பட்டேச முக்யாத்மநாம் 
பக்தாநாம் விமலோக்திமௌக்திகமணீநாதாய சக்ரே ப்ருசம் 
க்ருத்வா ஸாதுரஹஸ்யத்ரயாரத்தமகிலம் கூடம் விபச்சித்ரம் 
லோகார்யவரஜஸ் ஸுசிஷ கவரச் சூடாமணி சோபதே ||

[பிள்ளையுலகாசிரியரின் திருதம்பியராய், ஸத்சம்ப்ரதாயாத்தங்களை நன்றாக சிக்ஷித்து அருளி செய்பவராய் அனைவராலும் தலையில் மணி போலே தரிக்கத்தக்கவரான அழகிய மணவாள பெருமாள் நாயனார் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார், முதலான ஆழ்வார்களின் குற்றமற்ற வாக்குகளாகிற முத்து, மாணிக்கங்களை கொண்டு ரஹச்யத்த்ரயத்தின் ஆழ் பொருள்களையெல்லாம் பூர்வர்களின் திருவுள்ளத்திற்கு இசைய விளக்கி மிகவும் விளக்கமுறுகிறார் - அத்தகயவரை  அடிபணிகிறேன் ]


மன்னுபதின்மர் மறைப்பொருளில் மாறன்சீர் 
துன்னு மதுரகவி சொற்பொருளு மன்னநடை 
திங்கண்முகவல்லியுரை செம்போருளுந் தென்முடும்பை 
எங்கண் மணவாளர்க்கிறை 

Wednesday, October 17, 2012

ஈடுமுப்பத்தாறாயிரப்படி பெருக்கர்

 ஸ்ரீ:
ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே இராமனுசாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீமத்  வரத குரவே நம:

ஈடு முப்பத்தாறாயிரப்படியும் ஸ்வாமியின் 

திவ்யசூக்திகளும் 


ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர், யதீந்திர ப்ரவண ப்ரபாவத்தில், ஸ்ரீ மணவாள மாமுனிகளை பற்றி குறிப்பிடும் பொழுது "ஈடு முப்பத்தாறாயிரப்படி பெருக்கர்"  என அடைமொழி இட்டு அழைக்கிறார். 

ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளி பெரிய பெருமாளை மங்களாசாசனம் செய்வதற்கு செல்லும் முன்பு நடந்தவைகளாக யதீந்திர ப்ரவண ப்ரபாவத்தில் இருந்து அறியப்படுபவை - "அக்காலத்திலே கோயிலதிபதியாய் இருந்த திருமாலை தந்த பெருமாள் பட்டருடைய அனுமதிக்காக அவர் திருமாளிகையிலே எழுந்தருள, அவரும் அப்ப்யுத்தான பிரணாமாதிகள் தொடக்கமான உபசாரங்களை பண்ணி ஆசனத்திலே எழுந்தருளிவைத்து "தேவரீரை சேவிக்கப் பெற்றோமே"" என்று பெரிய ப்ரீதியோடே ஆதரித்து "திருவாய்மொழி ஒரு பாட்டுக்கு அர்த்தம் அருளிச் செய்ய வேணும்" என்ன, நாயனாரும் ஆழ்வாருடைய வைபவத்தை இதிஹ்யமாக பாட்டை எடுத்து உபன்யசித்தருள பட்டரும் போர வித்தராய் , "இவர் ஈடு முப்பத்தாறாயிரப்படி பெருக்கர்" என்று மிகவும் உபலாளித்து .....""

மேலும் ஜீயர் கிடாம்பி நாயனார் பக்கலிலே ஸ்ரீ பாஷ்யம் அதிகரிக்க எழுந்து அருளியதை விவரிக்குமிடத்து, "இப்படி ஜீயர் உருத்தொரும் ஈடு முப்பத்தாறாயிரப்படியை சொல்லிக் கொண்டு போகிறதைக் கண்டு ஆச்சர்யப்பட்டு, ஒருவரும் அறியாமல் ஏகாந்தத்திலே சென்று "முப்பத்தாறாயிரப்படி பெருக்கர்" என்று உமக்கு திருநாமம் சாத்தினது வெறுமனன்று ....."

என பொறித்து வைத்துள்ளார். ஸ்வாமி மணவாள மாமுனிகள் தமது ஆசார்யரிடம் செய்த பிரதிஞ்ஞை காரணமாக திருவாய்மொழியின்  மீதும்  ஈட்டின் மீதும்  இத்தகைய அசாதாரணமான பக்தி கொண்டிருந்தார் என்னில், அவரது ஸ்ரீ ஸூக்திகளில்  இது நன்கு புலப்பட்டிருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு ஒரு ஸ்ரீ சூக்தியினை அனுபவிப்போம். பெரிய ஜீயருடைய திருவாய்மொழி நூற்றந்தாதி அனைவரும் அறிந்ததே ஆகும். ஒவ்வொரு திருவாய்மொழி பதிகத்திற்கும் சுருக்காக ஒரு பாட்டினை அருளிச் செய்துள்ளார். 



ஸ்ரீ மணவாள மாமுனிகள் - ஸ்ரீவில்லிபுத்தூரில் ஐப்பசி திருமூலம் மங்களாசாசன சமயத்தில் 

இதில் வைகல் பூங்கழிவாய் பதிகத்தினை எடுத்துக் கொள்வோம். ஆழ்வார் இங்கு தூது விடும் பதிகம் ஆகும். இதற்க்கான திருவாய்மொழி நூற்றந்தாதி 

"வைகல் திருவண்வண்டூர் வைகும் இராமனுக்கு என் 
செய்கைதனை புள்ளினங்காள் செப்புமென - கைகழிந்த 
காதலுடன் தூது விடும் காரிமாறன் கழலே 
மேதினியீர் நீர் வணங்குமின்"

இங்கு இராமன் என்பது உயிரான வார்த்தை ஆகும். திருவண்வண்டூரில் சேவை சாதிக்கும் பெருமான் இராமபிரான் அல்லவே! இங்கு இராமபிரானைக் குறித்து தூது விடுவது பொருந்துமோ என்னில்,

ஈட்டில் இந்த திருவாய்மொழி பதிகத்திற்கு தூது விஷயம் இராமபிரான் (விபவம்) என நிர்ணயிக்கப் பட்டு உள்ளது . ஆழ்வாரும், இந்த பதிகத்தில் "மாறில் போரரக்கன் மதிள் நீறெழ செற்றுகந்த ஏறு சேவகனார்க்கு  " என்றோ தெரிவித்துள்ளார். இதற்க்கு வியாக்யானம் செய்த ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயரும்,  "இரண்டாம் தூதுக்கு விஷயம் விபவமிறே" என்றோ வ்யாக்யானித்துள்ளர்!

ஈட்டின் அர்த்த விசேஷங்கள் ஸ்வாமியின் திருஉள்ளத்தில் அலை எடுத்ததாலன்றோ இத்தகைய ஸ்ரீ சூக்தி வெளிப்பட்டது! "முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் - பின்னோர்ந்து தாம் அதனை பேசுவதற்கு" இது ஒரு சிறிய உதாரணம்.

குறிப்பு: ஈட்டில் மட்டும்  அன்றி அதற்க்கு சேமக் காப்பான ஆச்சர்ய ஹ்ருதயத்திலும் இது அற்புதமாக விளக்கப்பட்டு  உள்ளது. இது தனியே அனுபவிக்க வேண்டியதாகும். 

இன்னும் ஒன்று அனுபவிக்கலாம்.

ஆழ்வார் 10-ம் பத்தில், வேய்மருதோளினையில், ஆய்ச்சியர் பாவனையில் பாடிய பதிகத்திற்கு, திருவாய்மொழி நூற்றந்தாதிப் பாசுரம்,

"வேய்மருதோ ளிந்திரைகோன் மேவுகின்ற தேசத்தை 
தான்மருவாத் தன்மையினால்* தன்னைஇன்னம் - பூமியிலே 
வைக்குமென சிந்தித்து மால்தெளிவிக்கத் தெளிந்த 
தக்கபுகழ் மாறனெங்கள் சார்வு "

இங்கு ஆய்ச்சிகளை பற்றிய ப்ரஸ்தாவமோ, குறிப்போ ஈஷத்தும் கிடையாது. இதுவும் ஈட்டை அடியொற்றியே சாதித்ததாகும். இங்கு ஈடு முப்பத்தாறாயிரப்படி அவதாரிகை - "அநாதியாய் வருகிற அசித்சம்சர்கத்தை அனுசந்தித்து அஞ்சின அத்தாலும், ஈஸ்வர ஸ்வாதந்தரியத்தை அனுசந்தித்து அஞ்சின படியாலும் - அதாவது சிசுபாலனுக்கு தன்னைக் கொடுத்து ஸ்ரீ பரதாழ்வானுக்கு மறுத்து போன ஸ்வாதந்தரியமிறே......"

இன்னும் இப்பாசுரத்திலயே "மால்தெளிவிக்கத் தெளிந்த" என்பது தனியே அனுபவிக்க வேண்டியது.

இவை சில துணுக்குகளே யாகும். இது போன்று அனுபவிக்க வேண்டியது மிக உள!

அழகிய மணவாள பெருமாள் நாயனார், நம்மாழ்வார் திருவாய்மொழியினை வெளியிட்டருளியதை  குறிக்குமிடத்து, "நீர் பால் நெய் அமுதாய் நிரம்பின ஏரி நெளிக்குமா போலே" என அருளியுள்ளார். (ஏரியில் நீர் நிரம்பினால் தன்னடையே மதகுகள் வழியே வெளியேறுமா போலே, ஆழ்வார் திருஉள்ளத்தில் தேங்கி உள்ள பகவத் அனுபவமாவது திருவாய்மொழியாக வெளிப்பட்டது!). இதே போன்று ஸ்வாமியின் ஈடு அனுபவமே திருவாய்மொழி நூற்றந்தாதியாக வெளிப்பட்டது!

இதைக் கருத்தில் கொண்டு அன்றோ, இவ்வருளிச் செயலுக்கு தனியனிட்ட ஆச்சார்யர்களும் "சொல்லும் பொருளும் தொகுத்துரைத்தான்" என உரைத்தனர்!ஆனது பற்றியே இது "அல்லும் பகலும்" அனுபவிக்க வேண்டியதாயிற்று! (திருவாய்மொழி நூற்றந்தாதி பெருமை பற்றிய ஆங்கில கட்டுரைக்கு இந்த இடுகைக்கு செல்லவும்; http://sriramanujadarisanam.blogspot.in/2012/10/thiruvaimozhi-nootrandhadhi-perumai.html).

ஈடு முப்பத்தாறாயிரப்படியினை ஸ்வாமி வளர்த்த விதம் 

ஸ்வாமியிடம் ஈடு வந்தடைந்த விதம் ஓராண் வழியாய் ஆயிற்று. நம்பிள்ளை, ஸ்வாமியின் திருவவதாரத்தை பெரிய பெருமாளால்   உணர்த்தப்பட்ட பின், அதை ஓராண் வழியாய் நடத்தும் படியும் தக்க சமயத்தில் ஈடானது பிரசாரத்திற்கு வரும் எனவும் நியமித்தருளினார். ஈடு என்கிற மஹா க்ரந்தமானது அவருடைய நியமனப்படியே ஸ்வாமியிடம் வந்து தங்கிற்று.

ஸ்வாமி மணவாள மாமுனிகள் - திருவல்லிக்கேணி 
ஸ்வாமி அதனைக் கீழ்க்கண்டவாறு வளர்த்தருளினார்.
  1. பல பிரதிகள் ஏட்டில் அருளுவது.
  2. ஈட்டிற்கு பிரமாணத் திரட்டு அருளிச் செய்தது.
  3. ஈடு அர்த்தமாகும்படி கூட்டி  பிரதிகள் ஏறி அருள நியமித்தருளியது.
  4. ஈட்டிற்கு அரும்பதம் எழுதும் படி நியமித்தருளியது
  5. ஈடு சிம்மாசனத்தில் கந்தாடை அண்ணனை அபிஷேகித்தருளியது.
  6. நம்பெருமாளுக்கே ஈடு உபன்யசித்தது
ஸ்வாமிக்கு ஈட்டின் மீது உள்ள இத்தகைய அசாத்ய உற்றத்தை பற்றியே, ஸ்வாமிக்கு உபய பாஷா ப்ராவண்யம் இருக்கச் செய்தேயும், "வாழி அவன் மாறன் திருவாய்மொழிப்பொருளை மாநிலத்தோர் தேறும்படி உரைக்கும் சீர்" என வாழி திருநாமம் ஏற்பட்டுள்ளது.


"சேற்றுக்கமலவயல்சூழரங்கர் தம் சீர் தழைப்ப 
போற்றித்தொழும் நல்லஅந்தணர் வாழவிப் பூதலத்தே 
மாற்றற்ற செம்பொன் மணவாளமாமுனி வந்திலனேல் 
ஆற்றில்கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே "

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ 
சடகோபன் தண்தமிழ் நூல் வாழ - கடல்சூழ்ந்த 
மனனுலகம் வாழ மணவாளமாமுனியே !
இன்னுமொரு நூற்றாண்டிரும்.


Friday, October 12, 2012

இராமானுசன் தாள் பிடித்தார் பிடித்தார்


 ஸ்ரீ:
ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே இராமனுசாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீமத்  வரத குரவே நம:

கற்றோர்கள் தாமுகப்பர் கல்வி தன்னில் ஆசையுள்ளோர் 
பெற்றோம் என உகந்து பின்பு கற்பர் - மற்றோர்கள் 
மாச்சர்யத்தால் இகழில் வந்ததேன் நெஞ்சே இகழ்கை 
ஆச்சர்யமோ தான் அவர்க்கு.

நமது ஸ்ரீவைஷ்ணவ உலகமானது நிச்சலும் "ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்" திருவடிகளே சரணம் என ஓதி வருவதை காண்கிறோம். நமது ஒப்பிலாத ஒராண் வழி குருபரம்பரையானது பெரிய பெருமாள் தொடக்கமாக ஸ்ரீ மணவாள மாமுனிகள் பர்யந்தம், ஸ்வாமி உடையவரை நடுவாகக் கொண்ட ரத்ன ஹாரமாக விளங்குவதை காண்கிறோம்.

இனி எப்படி உடையவர், நம்மாழ்வாருக்கு பிராண பூதராய், திருவடி நிலையாய், மாறன் அடி பணிந்து உய்ந்தவர் ஆகிறார் எனவும்; மணவாள மாமுனிகள் உடையவரின் மீது ப்ராவண்யம் உடையவராய், அதுவே அவர்க்கு விஷேஷமாய் திகழுவதையும் காணலாம்.

நம்மாழ்வாரின் திருவடி நிலைகள், "இராமானுசன்" என்றே அழைக்கபடுகிறது. இப்படி அழைப்பதன் காரணம் என்ன? ஒவ்வொரு ஆச்சார்யரின் அவதாரத்திற்கும் ஒரு விசேஷ/முக்கிய  காரணம் இருக்கும். பெரிய ஆச்சான் பிள்ளையின் திரு அவதார நோக்கம் 4000 திவ்ய பிரபந்தங்களுக்கும் வியாக்யானம் செய்வதே ஆகும். பட்டரின் திரு அவதார நோக்கம் ஸ்ரீரெங்கத்தின் ஏற்றத்தை நிலைநிறுத்துவதே ஆகும். 



எம்பெருமானாரின் திரு அவதார நோக்கமோ, ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தத்தையும் கொள்கைகளையும் நன்கு நிலை நிறுத்தி பரவச் செய்வதே ஆகும். எம்பெருமானார் எந்த துணை கொண்டு இதைச் செய்தார் எனில், திருவாய்மொழியினைக் கொண்டே என அனைவரும் ஒரு மிடறாக கூறுவர்கள். அதனாலயே அவருக்கு நம்மாழ்வார் மீது விசேஷ ப்ராவண்யம் ஆயிற்று. திருவாய்மொழியினையும் நம்மாழ்வாரின் பெருமைகளையும் பரவச் செய்தார். எனவே தான் அவர் "மாறன் அடிபணிந்து உய்ந்தவர்" என கொண்டாடப்படுகிறார்.

யதீந்த்ரரும் யதீந்திர ப்ரவணரும் 

நிற்க. இப்போது பெரிய ஜீயரை பற்றி பார்க்கலாம். மணவாள மாமுனிகளின் திரு அவதார நோக்கமானது எம்பெருமானரை போற்றுவதே ஆகும். மற்றும் அவரது பெருமைகளை உலகோர்க்கு பறை சாற்றி, எம்பெருமானாரே நமக்கெல்லாம் ப்ராப்ய பிராபக பூதராய் விளங்குகிறார் என்பதையும் நன்கு விளங்கச்செய்வதே ஸ்வாமி மணவாள மாமுனிகளின் திரு அவதாரத்தின் சீரிய நோக்கம் ஆகும்.  
  1. ஸ்வாமி திருவவதாரம் செய்தது ஆழ்வார் திருநகரியிலே. உடையவருக்கு பிராண பூதரான நம்மாழ்வார் அவதரித்த இடம் என்பதினாலும்,
  2. சடகோப தாசர் என்னும் ஸ்ரீசைலரான திருவாய்மொழி பிள்ளையை ஆச்ரயிப்பதாலும்,
  3. ஸ்வாமி திருவாய்மொழிப் பிள்ளையை ஆச்ரையித்திருந்த காலத்தே, பவிஷ்யதாசார்யன் சந்நிதியிலே உடையவருக்கு நித்ய திருவாராதனாதிகள் நடத்தினார் என்பதாலும், 
  4. ரகஸ்யத்ரயத்தினாலும் அறுதியிடப்படும் பொருள் ஆசார்யனே (ஆசார்யன்/தேசிகன் என்னும் சப்தம் நமது சம்பிரதாயத்தில் உடையவரையே பற்றி இருக்கும்) என்பதை விளக்கும் பொருட்டு 20 ச்லோகங்களினால் யதிராஜ விம்சதி அருளியது!! (ரகச்யங்களினுடைய பத எண்ணிக்கை 20- திருமந்தரம் - 3; த்வயம் - 6 சரம ஸ்லோகம் - 11)
  5. ஆர்த்தி பிரபந்தம் எனும் அற்புத கிரந்தம் அருளிச்செய்து ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ப்ராப்ய ப்ராபகம் எம்பெருமானார் திருவடி நிலைகளே என நிலை நாட்டியது, (ஒரே ஒரு பாசுரம் அனுபவிப்போம்). வாழி எதிராசன் வாழி எதிராசன் வாழி எதிராசன் என வாழ்த்துவார் - வாழி என வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில் தாழ்த்துவார் விண்ணோர் தலை.
  6. எம்பெருமானார் நியமனமான 74 சிம்மாசனாதிபதிகள் குறிக்கும் பொருட்டு 74 வெண்பாக்களால் உபதேச ரத்தினமாலை அருளியது, (ஸ்வாமியின் இந்த சங்கல்பம் தெரிந்து இதில் ஸ்வாமியின் பிரச்தாவம் இல்லாது இருக்க கூடாது என விரும்பிய எறும்பி அப்பா, நம்பெருமாளை 73 வெண்பாக்களுடன் இந்த பிரபந்தம் முடியும் படி பிரார்த்தித்து, 74 வது பாசுரமாக மன்னுயிர்காள்  இங்கே.... சேர்த்தருளினார்),
  7. ஸ்வாமி தனது ஆர்த்தி பிரபந்தத்தில், ஸ்ரீரெங்கத்தில் எழுந்தருளியிருக்கும் உடையவர் திருமேனியின் மீது தமது ஆதராதிசதியத்தை வெளியிட்டருளியது
ஆகியவை கொண்டு இவர்த்தம் அறுதியிடலாம்.


இவை எல்லாம் தாண்டி, ஸ்ரீரங்கத்திலும், ஆழ்வார் திருநகரியிலும் ஸ்வாமியின் திருமேனியை சேவிக்கும் கால், ஒரு விஷேஷ பரமானந்தம் ஏற்படுகின்றது. இவ்விரு திவ்ய தேசங்களிலும், ஸ்வாமி உற்சவ காலங்களில் வாஹன புறப்பாடு கண்டருளுவது இல்லை, மற்றும் திருஅத்யயன உற்சவத்திற்கு எழுந்து அருளுவதும் இல்லை (ஆழ்வார் திருநகரியில் ஸ்வாமி சாற்றுமுறை அன்று மட்டும் எழுந்தருளுகிறார்). இவ்விரு திவ்ய தேசங்களிலும் அனைத்து பெருமைகளும் நம்மாழ்வாருக்கும், உடையவருக்குமே  உண்டாகவேண்டும் என ஸ்வாமி தமது திருமேனியை வாமனன் போல் சுருக்கி கொண்டார்!

ஆகையால் அன்றோ, எம்பார், பட்டர், வடுக நம்பி, நம்பிள்ளை என பல மகாசார்யர்கள் இருந்தும், மணவாள மாமுனிகள் "யதீந்திர ப்ரவணம் வந்தே"  என  நம்பெருமாளால் கொண்டாடப் பட்டார். அதனால் அன்றோ நம்பெருமாள் இவருக்கு ஆச்சார்ய ஸ்தானத்தையும் கொடுத்து, ஆதி சேஷ பர்யங்கத்தையும் கொடுத்தான்! இது என்றோ நடந்தது என்னாதே, இற்றைக்கும் ஸ்வாமியின் திருஅத்யயனனத்தை, சிஷ்யனான தான் நடத்தி வருகிறான்! (மேலும் அறிந்து கொள்ள http://kaarimaaran.com/thiruadhyayanam.html)



மணவாள மாமுனிகள் - ஸ்ரீபெரும்பூதூரில் சேவை சாதிக்கிறபடி 

இன்னும், ஆழ்வார் அடியார் அடியார் அடியார் தம் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடிகளே என 7வது திருவடி சம்பந்தத்தை விசேஷித்து கொண்டாடியுள்ளார்.

இப்பொழுது கண்ணபிரான் திருவடியான சடகோபரிடம் இருந்து 
  1. மதுரகவிகள் 
  2. நாதமுனிகள் 
  3. உய்யக்கொண்டார் 
  4. மணக்கால் நம்பி 
  5. ஆளவந்தார் 
  6. பெரிய நம்பி 
  7. உடையவர் 
என உடையவர் 7வது சம்பந்தத்தால் ஏற்றம் பெற்று மாறன் அடி பணிந்து உய்ந்தவர் ஆனாப் போலே, இராமானுசன் தாளான 
  1. எம்பார்  
  2. பட்டர் 
  3. நஞ்சீயர் 
  4. நம்பிள்ளை 
  5. வடக்கு திருவீதி பிள்ளை/ பிள்ளை லோகாச்சாரியர் 
  6. திருவாய்மொழி பிள்ளை 
  7. மணவாள மாமுனிகள் 
இந்த விசேஷ சம்பந்தம் இருப்பதினால் தான், நமது ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயதவர்கள் அனைவரும் "இராமானுச தாசன்" என சொல்லி கொண்டாலும், மணவாள மாமுனிகள் ஒருவர் மட்டுமே யதீந்திர ப்ரவணர் என போற்றப்படுகிறார்.

ஸ்ரீ மணவாள மாமுனிகள் - காஞ்சிபுரம் 

இந்த சம்பந்தத்தை வரவரமுநி தமது ஆர்த்தி பிரபந்தத்தில் சூசகமாக உணர்த்தயுள்ளார். அந்த செய்யுள் பின்வருமாறு.

பூமகள்கோன் தென்னரங்கர் பூங்கழற்கு பாதுகமாய்த் 
தாம் மகிழும் செல்வச் சடகோபர் - தேமலர்த்தாட்கே 
எய்ந்து இனிய பாதுகமாம் எந்தை இராமானுசனை 
வாய்ந்து எனது நெஞ்சமே வாழ்  

இதையே நாம் அனைவரும் உய்யும் பொருட்டு பிள்ளை உறங்காவில்லி தாசர் இயல் சாற்று முதல் பிரபந்தத்தில், 

நன்றும் திருவுடையோம் நானிலத்தில் எவ்வுயிர்க்கும் 
ஒன்றும் குறையில்லை ஓதினோம் - குன்றமெடுத்தான்  
அடிசேர் இராமானுசன் தாள் பிடித்தார் 
பிடித்தாரை பற்றி.

என பிரசாதிதருளியுள்ளார்.

ஓதினோம் - என்ன ஓதினோம்?

ஒன்றும் குறை இல்லை ஓதினோம் - யாருக்கு? 

இராமானுசன் தாள் பிடித்தார் பிடித்தாரை (ஸ்ரீ மணவாள மாமுனிகளை) பற்றியவர்களுக்கு  - அந்த இராமானுசன் எப்படி பட்டவர் எனில் 

குன்றம் எடுத்தான் அடி சேர் -  கண்ணன் எம்பெருமானின் திருவடிகளை பற்றியவரான மாறன் அடிபணிந்து உய்ந்தவர் 

குன்றமெடுத்தான் அடி சேர் இராமானுசன் தாள் பிடித்தார் பிடித்தாரை பற்றியவர்களுக்கு - ஒன்றும் குறை இல்லை ஓதினோம்!

ஆக, இப்படி கண்ணன் கழல்களான நம்மாழ்வார், அவர் திருவடி நிலைகளான பகவத் இராமானுஜர், அவர் திருவடி நிலைகளாக விளங்குகின்ற மணவாள மாமுனிகளை அடைந்தவர்களுக்கு, உறு துயர் அடையாவே!


ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஆதாரம் - ஸ்ரீ வைஷ்ணவ சமய ஆசார நிஷ்கர்ஷம், ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்.


அனுபந்தம் - 1

ஸ்ரீ ஸூக்தி ரத்னாகரம் - ஸ்ரீமதுபயவே. இளையவில்லி. சடகோபாச்சாரியார் ஸ்வாமி ஸ்ரீமுகத்தில் இருந்து தொகுத்தது 



மூலம் - ஸ்வாமி உபய வேதாந்த மஹா வித்வான் காஞ்சி பிர.ப ஸ்வாமியின் தன் சரிதை சுருக்கம் 



Wednesday, October 10, 2012

THIRUVAIMOZHI NOOTRANDHADHI PERUMAI


Sri:
Srimathae Ramanujaya namaha
Srimath VaraVaramunayae namaha

English Translation of 

thirUVAIMOZHI NOOTRANDHADHI pERUMAI

AUTHORED by 

Ubhaya Vedantha Maha Vidwan Kanchi Sri Prathivaathi Bayankaram 


ANNANGARACHARYA SWAMI


Among the innumerable works done in this world, of the type 'andhAdhi venpA', this one is incomparable to others.  Any work authored by our achAryAs will be unparalleled.  This being said, "thiruvAimozhi nootrandhAdhi" earns its significance not because it was composed by one of our achAryAs. This will be proved substantially now, so that all will be aware of this.

All the 1000 verses in thiruvAimozhi are of the type andhAdhi. In iyarpA 8 are of andhAdhi type. kanninunchiruthAmbu is of andhAdhi type. periAzhwAr and thriumangai azhwAr have sung one padhigam as andhAdhi in their thirumozhi. This world has witnessed a lot of andhAdhi prabhandhams. The way they are sung depends on authors of the prabhandhams. Similarly the way they are finished is also up to the wish of the authors. For the next pAsuram, they can start with either seer or sol or yezhuthu. Its completely up to the author's wish. And they are not bound by any rules here. 

For example, if we take mudhal thiruvandhAdhi, poigai azhwAr starts the divya prabandham as "vaiyam thagaliyA". It's azhwAr's wish that He started as "vaiyam". Similarly He finished the first pAsuram as "idarAzhi neengugavae yenru". This is also Azhwar's wish. Even He could have finished as "idarAzhi neengugavae yingu". The authors of andhAdhi prabandham, can choose either venpA or kattalai kalithurai for the finishing word as per their wish. This is how all the authors have sung.

Now, we shall see about the structure of thiruvAimozhi nootrandhAdhi sung by Sri manavAla mAmunigal. Since Sri namAzhwAr started thiruvAimozhi as "uyarvara", swamy bound by that, started thiruvAimozhi nootrandhAdhi as "uyarvae paran padiyai". The next padhigam in thiruvAimozhi is "veedumin mutravum". Adhering to that  swamy finished the first pAsuram as "verAgavae vilayum veedu"! For the next pAsuram also, swamy has started as "veedu seithu", thereby adhering to the andhAdhi murai in His prabandham as well! All the hundred pAsurams have been done according to such rules only!

Swamy manavAla mAmunigal - thiruvahindrapuram

If we look keenly, we will realize that even yedhugai and monai are not Sri manavAla mAmuni's own wish here! To match "veedu" in monai "verAgavae" came, and because of that in the previous line "vArAmal" to satisfy yedhugai! Beyond that Swamy had to construct the 'sAram' of the 10 thiruvAimozhis in that padhigam! In all the pAsurams 'mAran's' name needs to be included. There has been no such andhAdhi that has been sung with so many rules!

Some great scholar has to try the same for periya thirumozhi. Then only we will be able to appreciate the greatness of this grantha! (please see annex-I)

Annex - I 

Based on some letter exchanges after this article, Sri P.B. Sampath Swamy has done thirumozhi nootrandhAdhi similair to thiruvAimozhi nootrandhAdhi.